Thursday 18th of April 2024 06:10:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றி முகநூலில் போற்றிப் பகிர்ந்த இளைஞர் திருமலையில் கைது!

விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றி முகநூலில் போற்றிப் பகிர்ந்த இளைஞர் திருமலையில் கைது!


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரைப் போற்றி முகநூலில் கருத்து வெளியிட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதியாக கடமையாற்றும் 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண,

தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல், சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாக கருதப்படுவதாகவும் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது 24 வயது என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் குறித்த இளைஞர் போர் முடிந்த போது 12 வயதுச் சிறுவனாக இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE