Tuesday 23rd of April 2024 02:23:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் குறைவடையும் கொரோனா பாதிப்பு: நாளாந்த தொற்று 4 ஆயிரமாக குறைவடைந்தன!

தமிழ்நாட்டில் குறைவடையும் கொரோனா பாதிப்பு: நாளாந்த தொற்று 4 ஆயிரமாக குறைவடைந்தன!


தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் குறைவடைந்து வரும் நிலையில் நாளாந்த தொற்று 4 ஆயிரமாக குறைவடைந்துள்ளன.

நேற்று (ஜூலை-03) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 13 ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக,

கோயம்பத்தூரில் - 474 பேர்

ஈரோட்டில் - 360 பேர்

சேலத்தில் - 251 பேர்

தஞ்சாவூர் - 232 பேர்

திருப்பூரில் - 231 பேர்

சென்னையில் - 227 பேர்

ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 24 இலட்சத்து 92 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 35,881 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE