பாராளுமன்ற உறுப்பினராக இன்று நியமிக்கப்பட்ட பசில் ராஜபக்ச அனேகமாக நிதி அமைச்சுப் பொறுப்பை நாளை ஏற்றுக்கொள்வார் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரனதுங்க தெரிவித்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச வசம் தற்போது நிதி அமைச்சு பொறுப்பு உள்ள நிலையில் அவர் தானாக முன்வந்து நிதி அமைச்சை பசில் ராஜபக்சவிடம் கையளிப்பார் என அவர் கூறினார்.
பசில் ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்ளும் பசில் உடனடியாகவே நிதி அமைச்சராக பொறுப்பேற்பார் என தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை