இலங்கை கிரிக்கெட் அணி குழாமிற்குள் மீண்டும் கொரோனா தொற்று கைவரிசையை காட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டு வரும் க்ராண்ட் ப்ளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுபயணம் சென்று இலங்கை அணி திரும்பிய நிலையில் துடுப்பாட்ட பயிற்சியாளர் க்ராண்ட் ப்ளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை-இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் மூவர் உள்ளிட்ட அணி குழாமினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, இலங்கை