Thursday 25th of April 2024 06:41:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணம்: பிரேசிலை வீழ்த்தி வாகை சூடியது அர்ஜென்டினா!

கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணம்: பிரேசிலை வீழ்த்தி வாகை சூடியது அர்ஜென்டினா!


கோபா அமொரிக்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி வாகை சூடியது லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்று வந்தது.

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரசிகர் இன்றிய நிலையில் நடைபெற்றது.

இப் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் கிண்ணத்தை கைப்பற்றும் போட்டிக்களத்தில் எதிர்கொண்டிருந்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 22-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா முதலாவது கோல் அடித்தார். முதல்பாதி ஆட்டம் நிறைவு பெறும் வரை இரு அணிகளின் சார்பிலும் மேலதிக கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

இடைவேளையின் பின்னர் ஆரம்பித்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் நிறைவிலும் மேலதி கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில் பரபரப்பான இறுதிப் போட்டி நிறைவு பெற்றது.

இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா அணி வாகை சூடியது.


Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE