Friday 29th of March 2024 02:30:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐரோப்பிய கிண்ண இறுதி போட்டியில் மோதல்களில் சிக்கி 19 பொலிஸார் காயம்!

ஐரோப்பிய கிண்ண இறுதி போட்டியில் மோதல்களில் சிக்கி 19 பொலிஸார் காயம்!


லண்டன் வெம்பிளே மைதானத்தில் இடம்பெற்ற 16-ஆவது ஐரோப்பிய கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலி கிண்ணத்தைக் கைப்பற்றியதை அடுத்து ரசிகர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 19 இங்கிலாந்து பொலிஸார் காயமடைந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியின்போது பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 49 பேரைக் கைது செய்துள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி கிண்ணத்தைக் கைப்பற்றியதை அடுத்து மைதானத்தில் ரசிகர்கள் பலர் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த மோதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE