அரசியலில் மீண்டும் இறங்குவேனா? இல்லையா? என்பது குறித்து மன்ற நிர்வாகிகளிடம் பேசி அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்று திரும்பிய ரஜினிகாந்த் இன்று சென்னை - போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டின் முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசியலில் இறங்கவில்லை என்று அறிவித்த பின்னர் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. ஏனென்றால் அண்ணாத்தே படப்பிடிப்பு பணிகள் தாமதமாகின. தோ்தல் வந்தது. பின்னர் கொரோனா நெருக்கடி தொடங்கியது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்று இப்போது திரும்பியிருக்கிறேன் .
மக்கள் மன்றத்தை தொடரலாமா? மன்றத்தின் பணி என்ன? நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசிட்டு முடிவைச் சொல்வேன்” எனவும் நடிகர் ரஜனிகாந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் படங்கள் வெளியாகும் போது வழக்கமாக அரசியல் பேசி விளம்பரம் தேடுவது ரஜினிகாந்தின் வழமை. பின்னர் அதனை மறுத்துவிடுவார். 25 ஆண்டுகளாக அவர் இவ்வாறான விளம்பர உத்தியை கையாண்டு வருகிறார். அது போலவே இப்போதும் படம் வெளியாகவுள்ள நிலையில் அவர் அரசியல் பேச ஆரம்பித்துள்ளார் என அரசியல் விமர்சர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது அண்ணாத்த படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் மீண்டும் தன்னைப் பற்றி விவாதம் நடைபெறவேண்டும். அதன் மூலம் படத்துக்கு விளம்பரம் தேட வேண்டும். என்பதற்காகவே அவர் அரசியல் பேச்சை எடுத்துவிட்டுள்ளார் எனவும் விமா்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன