2015 ஆம் ஆண்டு வெளியான பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன் கல்யாண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்ரியா நடிப்பில் ஏற்கனவே கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே ஆகியப் படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
இது மட்டுமல்லாமல் இயக்குனர் ஹரியின் படம், ருத்ரன், இந்தியன் 2, பத்து தல உள்ளிட்ட படங்களிலும் நடிக்கவுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை