Wednesday 24th of April 2024 11:51:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
அல்வாய் வடக்கில் வீடுகளுக்கான நிதி இதுவரை வழங்கப்படாமையால் பயனாளிகள் பாதிப்பு!

அல்வாய் வடக்கில் வீடுகளுக்கான நிதி இதுவரை வழங்கப்படாமையால் பயனாளிகள் பாதிப்பு!


வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அல்வாய் வடக்கு j400 கிராம சேவகர் பிரிவில் வழங்கப்பட்ட 40 வீடுகளுக்குமான நிதி இதுவரை வழங்கப்படாமையால் பயனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்து 2019 ம் ஆண்டு குறித்த வீட்டுத்திட்டம் வழங்கப்படும்போது 40 பை சீமெந்தும் 110000/- காசும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வீட்டு திட்டம் முழுமைடைந்த பின்னர் மிகுதி பெறுமதியான 550000/- பணம் பகுதி பகுதியாக தருவதாக தெரிவித்திருந்தும் இதுவரை அந்த பணம் வழங்கப்படாமையால் வங்கிகளில் கடன் பட்டும், தமது தங்க நகைகளைகளை அடகுவைத்தும் இருந்த பணத்தை கொண்டும் இருந்த கொட்டில் வீட்டை உடைத்து புதிய வீடு கட்டிய மக்கள் பலருக்கு இன்று பாதுகாப்பாக இருப்பதற்கு கொட்டில் வீடுகள் கூட இல்லாத நிலை காணப்படுவதாகவும் மாரி காலம் ஏற்பட்டால் தம்மால் குடியிருக்க முடியாத நிலை இருக்பதாகவும் அம்மக்கள் மேலும் தெரிவித்ததுடன் இம்மாரி மழை வருவதற்கு முன் தமது வீடுகளை பூரணப்படுத்த உதவுமாறு மக்கள் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டுவிழாவிற்கு இலங்கை சுதந்திரக்கட்சி இணைப்பாளர் திரு செல்வதீஸன் உட்பட்ட பலரும் கலந்து கொண்டு தொடக்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE