திருகோணமலை மாவட்டம், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5வயது சிறுவன் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (ஜூலை-13) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வுகூட வட்டாரங்கள் அருவிக்கு தெரிவித்தன.
திருகோணமலை மாவட்டம், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 44 பேரின் மாதிர்கள் நேற்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போதே இவ்வாறு 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.52 வயது பெண் ஒருவர், 5 வயது சிறுவன், 15, 18, 21, 23, 29, 29, 59, 67 வயது ஆண்கள் என இவ்வாறு 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை