Saturday 20th of April 2024 09:10:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
தலிபான்கள் - படையினரிடையே  ஆப்கானிஸ்தானில் உக்கிர மோதல்!

தலிபான்கள் - படையினரிடையே ஆப்கானிஸ்தானில் உக்கிர மோதல்!


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறிவரும் நிலையில் மேலும் சில மாவட்டங்களைக் கைப்பற்றும் நோக்கில் தலிபான்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தலிபான்களின் கடும் தாக்குதல்களை முறியடித்து அவர்களின் முன்னேற்ற முயற்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் பல மாவட்டங்களில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

காந்தஹார் நகரம், தெற்கு காந்தஹார் மாகாணத்தின் தலைநகரம், தாலுகான் நகரம், வடக்கு தகார் மாகாணத்தின் தலைநகரம், குண்டுஸ் நகரம், வடக்கு குண்டுஸ் மாகாணத்தின் தலைநகரம் மற்றும் பத்கிஸ் மாகாணத்தின் தலைநகர் காலா-இ-நாவ் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தலிபான் இயக்கம் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

தலிபான்களின் முன்னாள் கோட்டையான கந்தஹார் நகரில் நேற்று தலிபான்கள் நடத்திய உக்கிர தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இறந்த இருவரின் உடல்கள் மற்றும் 9 சிறுவர்கள், ஒரு பெண் உட்பட காயமடைந்த 18 பேர் மருத்துமனைக்குக் கொண்டுவரப்பட்டதாக காந்தஹார் நகரத்தின் மிர் வெய்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். அவர் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.

தாலுகான் நகரத்தில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் தோல்வியடைந்தது. இதனையடுத்து 12 பேரின் சடலங்களைக் கைவிட்டு அவர்கள் பின்வாங்கினர் என இராணுவ அதிகாரி சயீத் நயீம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு கஸ்னி மாகாணத்தில் மாலஸ்தான், மத்திய பமியன் மாகாணத்தில் கோமார்ட் மற்றும் சீகான் மாவட்டங்கள் உட்பட மூன்று மாவட்டங்களை கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலிபான்களின் பிடியில் இருந்த படாக்ஷன் மாகாணத்தில் உள்ள குரான்-வா-முன்ஜன் மாவட்டம் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது.

நாட்டின் தலைநகர் காபூலை தெற்கில் உள்ள காந்தஹார் நகரத்துடனும், மேற்கு ஹெராத் மாகாணத்துடனும் இணைக்கும் நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கஸ்னி மாகாணத்தின் தலைநகரான கஸ்னி நகரத்தை கைப்பற்ற தலிபான் உக்கிர தாக்குதலை தொடுத்துள்ளனர். காந்தஹார் நகரம் காபூலில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE