இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் இங்கிலாந்துடன் விளையாடியது.
முதலிரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றிக்காக 3வதும் இறுதியுமானா போட்டியில் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பாகிஸ்தானை துடுப்பெடுத்தாட பணித்தது.
இதையடுத்து முதலில துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அதிகபட்சமாக பாபர் அசாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 139 பந்துகளை எதிர் கொண்டு நான்கு 6 ஓட்டம், பதின்நான்கு 4 ஓட்டம் அடங்கலாக 158 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.
பந்துவீச்சில் பிரைடன் கார்ஸ் 5 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.
332 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்களிலேயே 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்ததன் மூலம் 3விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 102 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்துவீச்சில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்சும், தொடர் நாயகனாக இங்கிலாந்தின் சஹிப் மொஹமட்டும் தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, உலகம்