Friday 19th of April 2024 02:04:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட்  அணியுள்ள இருவருக்குக் கொரோனா!

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணியுள்ள இருவருக்குக் கொரோனா!


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 23 பேரில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தொற்று அறிகுறி ஏதும் இல்லை. தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு மீள் பரிசோதனையில் தொற்று எதிர்மறை முடிவு கிடைத்துள்ளது.

மற்றொரு வீரருக்கு எதிர்வரும் 18-ஆம் திகதி மீண்டும் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இவா் டெல்டா திரிவு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

முதல் பரிசோதனை நடந்தபோது இரு வீரர்களுக்கும் லேசான இருமலும் சளியும் இருந்தது என இந்திய கிறிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. எனினும் அந்த இருவீரர்கள் யார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE