உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை வரையான தரவுகளின்படி உலகம் முழுவதும் 19 கோடியே 3 இலட்சத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 17 கோடியே 35 இலட்சத்து 8 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 1 கோடியே 27 இலட்சம் பேர் வரை தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 79 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளது.
இதேவேளை, தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்து 92 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
உலகில் அதிகளவானவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 3,49,27,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,24,606 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 3,10,63,987 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன், 4,13,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது அதிக பாதிப்புக்களைச் சந்தித்துவரும் பிரேசிலில் இன்றுவரை 1 கோடியே 93 இலட்சத்து 08 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 5,40,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் அங்கு உறுதி செய்யப்பட்ட தொற்று நோயாளர் தொகை வருமாறு,
ரஷ்யா - 59,07,999, பிரான்ஸ் - 58,44,249, துருக்கி - 55,14,373, இங்கிலாந்து - 53,32,371, ஆர்ஜெண்டினா- 47,37,213, கொலம்பியா - 46,01,335, இத்தாலி - 42,81,214, ஸ்பெயின் - 41,00,222, ஜேர்மனி - 37,49,922, ஈரான் - 34,85,940, போலந்து - 28,81,241, இந்தோனேசியா- 27,80,803.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்