யாழ். குடா நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் கடந்த 3 நாட்களில் மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 8-14 வரையான நாட்களில் எந்தவொரு கொவிட்-19 மரணமும் யாழ். மாவட்டத்தில் பதிவாகியிருக்காத நிலையில் கடந்த 3 நாட்களில் இவ்வாறு மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில்,ஜூலை - 01 - 04 பேர்
ஜூலை - 02 - 02 பேர்
ஜூலை - 04 - ஒருவர்
ஜூலை - 05 - ஒருவர்
ஜூலை - 06 - 03 பேர்
ஜூலை - 07 - ஒருவர்
ஜூலை - 15 - ஒருவர்
ஜூலை - 16 - 02 பேர்
ஜூலை - 17 - ஒருவர்
என ஜூலை 01-17 வரையான நாட்களில் மேலும் 15 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் யாழ். மாவட்ட மொத்த உயிரிழப்பு 111 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,
மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 34 பேர்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 13 பேர்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர்
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்
வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - ஒருவர்
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்