சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 262 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதிகபட்சமாக, சமிக கருணாரத்னே ஆட்டமிழக்காது-43 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், அணித்தலைவர் தசுன் சானக 39, அசலங்க-38, அவிஸ்க பெர்னாண்டோ-32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
பந்து வீச்சில் தீபக் ஷாகர், குல்தீப் யாதவ், ஷாகல் ஆகியோர் தலா இரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இதையடுத்து 263 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி 9 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்களை பெற்று விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை