Thursday 28th of March 2024 05:52:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது!


இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 2 - 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை மட்டுமே இலங்கை அணி பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில், சரித் அசலங்க 65 ஓட்டங்களை கூடுதலாகப் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 276 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் தீபக் சஹர் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய இந்திய அணி 2-0 என்ற அடிப்படையில் ஒரு நாள் சர்வதேச தொடரை கைப்பற்றியது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE