இந்தியாவின் கோவாக்ஸின் கொவிட் 19 தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டு அனுமதி கோரி உலக சுகாதார அமைப்புக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் இது குறித்து ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசியின் அங்கீகாரத்துக்கான திகதி இனித்தான் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவையுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்ஸின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. எனினும், இந்த தடுப்பூசியை உலகளாவிய பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் அவசியமானதாகும்.
இந்நிலையில் கோவாக்ஸின் அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் பல்வேறு தரவுகளுடன் விண்ணப்பித்துள்ளது.
இந்த தரவுகளை தற்போது பரிசீலித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னரே இதனை அங்கீகரிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கோவாக்ஸின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக பணிப்பாளர் சுசித்ரா எல்லா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா