அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசின் நிர்ணய விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்ய சகல அரிசி ஆலை உரிமையாளர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருடன், இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்த இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இதன்படி , ஒரு கிலோ நாடு நெல்லை 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 52 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 55 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை