யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தின் கொவிட்-19 அறிக்கையிடல் பிரிவினரால் வெளியிடப்படும் மாவட்ட கொவிட்-19 நிலவர அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (ஜூலை-20) இவ்வாறு 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் ஜூலை மாதத்தின் 20 நாட்களில் மட்டும் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.ஜூலை - 01 - 04 பேர்
ஜூலை - 02 - 02 பேர்
ஜூலை - 04 - ஒருவர்
ஜூலை - 05 - ஒருவர்
ஜூலை - 06 - 03 பேர்
ஜூலை - 07 - ஒருவர்
ஜூலை - 15 - ஒருவர்
ஜூலை - 16 - 02 பேர்
ஜூலை - 17 - ஒருவர்
ஜூலை - 18 - ஒருவர்
ஜூலை - 20 - 05 பேர்
இவ்வாறு ஜூலை 01-20 வரையான நாட்களில் மேலும் 22 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் யாழ். மாவட்ட மொத்த உயிரிழப்பு 117 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,
மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 35 பேர்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 14 பேர்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 10 பேர்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 10 பேர்
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 06 பேர்
வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 04 பேர்
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - ஒருவர்
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்