Friday 29th of March 2024 04:59:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். குடாவில் ஒரே நாளில் ஐவர் பலி: மொத்த கொரோனா பலி 117 ஆக அதிகரிப்பு!

யாழ். குடாவில் ஒரே நாளில் ஐவர் பலி: மொத்த கொரோனா பலி 117 ஆக அதிகரிப்பு!


யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் கொவிட்-19 அறிக்கையிடல் பிரிவினரால் வெளியிடப்படும் மாவட்ட கொவிட்-19 நிலவர அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (ஜூலை-20) இவ்வாறு 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் ஜூலை மாதத்தின் 20 நாட்களில் மட்டும் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.

ஜூலை - 01 - 04 பேர்

ஜூலை - 02 - 02 பேர்

ஜூலை - 04 - ஒருவர்

ஜூலை - 05 - ஒருவர்

ஜூலை - 06 - 03 பேர்

ஜூலை - 07 - ஒருவர்

ஜூலை - 15 - ஒருவர்

ஜூலை - 16 - 02 பேர்

ஜூலை - 17 - ஒருவர்

ஜூலை - 18 - ஒருவர்

ஜூலை - 20 - 05 பேர்

இவ்வாறு ஜூலை 01-20 வரையான நாட்களில் மேலும் 22 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் யாழ். மாவட்ட மொத்த உயிரிழப்பு 117 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,

மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 35 பேர்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 14 பேர்

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 10 பேர்

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 10 பேர்

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 06 பேர்

வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 04 பேர்

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - ஒருவர்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE