அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளது அரசாங்கம். இதனையடுத்து கொரோனா காரணமாக ஒத்தி வைக்கபட்ட பல படங்களின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கியுள்து.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் டான் திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் வெளியீடாக டான் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம் படக்குழுவினர்.
ஏற்கனவே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக வெளியான தகவலில் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு டான் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் உற்சாகத்தை தந்துள்ளது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை