கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதன்படி , கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதினுள் 51, 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில், மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் மிகவும் அவதானம் செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை