யாழ்ப்பாணம் நாவற்குழியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாவற்குழி கெமுனு வோச் படைப்பிரிவு படைமுகாமில் கடமையாற்றி வந்த சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் பணியில் இணைந்து பத்து மாதங்களே ஆகியுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்தவர் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டிருப்பதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் மரணம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்