யாழ்ப்பாணம் நெல்லிடியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த ஊழியர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நெல்லிடி NDB வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியரே தொற்றுக்குள்ளானதாகவும் அவர் தும்பளை பகுதியில் வசித்துவருவதாகவும் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த ஊழியருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கரவெட்டி