யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு - மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை நேற்று சந்தித்துப் பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட இராணுவத் தளபதியாக கொடித்துவக்கு பதவியேற்ற நிலையில் சம்பிரதாயபூா்வமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன், நயினாதீவு விகாராதிபதி மற்றும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதின குரு முதல்வர் ஆகியோரையும் மாவட்ட இராணுவத் தளபதி சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்