சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு எதிரான ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட அப்பிள் டெய்லி பத்திரிகையில் முன்னாள் தலைமை பதில் ஆசிரியர் லாம் மான்-சங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை லாம் மான்-சங் கைது செய்யப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நிய சக்திகளுடன் இணைந்து நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த ஹொங்கொங் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதுவரை ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வந்த ஹொங்கொங் மக்களுக்கு சீனாவின் மற்ற பகுதிகளில் இல்லாத ஜனநாயக உரிமைகள் அளிக்கப்படும் என்று அப்போது உறுதியளிக்கப்பட்டது.
எனினும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி ஹொங்கொங்கில் நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்கும் வகையில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது.
அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை சீன சார்பு ஹொங்கொங் அரசு சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் ஹொங்கொங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த ஒரே பத்திரிகையான அப்பிள் டெய்லி அலுவலகத்தில் பொலிஸாா் கடந்த மாதம் தீவிர சோதனை நடத்தினா். தொடர்ந்து அந்தப் பத்திரிகையில் தலைமை ஆசிரியா் ரையன் லா, தலைமை செயலதிகாரி சேயங் கிம்-ஹங் உள்ளிட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அவா்கள் மீது வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பத்திரிகையில் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து, அப்பிள் டெய்லி பத்திரிகை வெளியீடு நிறுத்தப்பட்டது.
ஏற்கெனவே போராட்டத்தைத் தூண்டிய வழக்கில் அப்பிள் டெய்லியின் நிறுவனா் ஜிம்மி லாய் 20 மாத சிறை தண்டனை அனுபவித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.