இலங்கையின் சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் தேர்த்திருவிழா சிறப்புற நடைபெற்றுள்ளது.
இன்றைய தேர்த்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.
ஆண்டு தோறும், அனலைதீவு ஐயனார் திருவிழாவிற்காக புலம்பெயர் தேசங்களைச் சேர்ந்த கிராமத்தவர்கள் திரண்டு வந்து பங்கேற்பது வழமையாகும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர் தேசங்களிலிருந்து மக்கள் பங்கெடுக்கமுடியாத நிலை காணப்படுகிறது.
இருந்தபோதிலும் கொரோனாப் பாதிப்பு குறைவடைந்து வழிபாடுகளுக்கான கட்டுபாட்டுத் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் பெருமளவில் பங்குகொண்டு ஐயனாரை வழிபட்டு தேர்த்திருவிழாவிலும் பங்கேற்றுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்