Saturday 20th of April 2024 12:22:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
பணிப் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிசாட்டின் மைத்துனர் கைது!

பணிப் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிசாட்டின் மைத்துனர் கைது!


முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ரிசாட்டின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் முன்னதாக பணியாற்றிவந்த 22 வயதான பணிப்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ரிசாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமி விவகாரத்தில் ரிசாட்டின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE