Tuesday 23rd of April 2024 07:23:43 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா பலி 4,000 ஐக் கடந்து அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா பலி 4,000 ஐக் கடந்து அதிகரிப்பு!


இலங்கையில் மேலும் பலர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மொத்த கொவிட்-19 உயிரிழப்புகள் 4,000 ஐக் கடந்து அதிகரித்துள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, மேலும் 43 கொவிட் மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 43 மரணங்களும் நேற்றைய தினம் (ஜூலை-22) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் 17 பேர் மற்றும் ஆண்கள் 26 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடநது 4,002 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE