இந்தியா வசம் இருக்கும் இலங்கையின் எண்ணெய்க் குதங்களில் 24 குதங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் தொடர்ச்சியாகப் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாட்டில் தற்போது மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான எரிபொருள் தாராளமாக உள்ளது என்றும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
இலங்கையில் உள்ள எரிபொருள் களஞ்சிய நிலையங்களில் முழுமையாக எரிபொருளை நிரப்பினாலும், ஒரு மாதத்துக்கான எரிபொருளையே சேமிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்குப் புதிதாக எண்ணெய்க் குதங்கள் அவசியமாகின்றன என்றும், திருகோணமலை குதங்களில் 24 குதங்களைப் பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் இது குறித்து நீண்ட காலமாக பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டாலும், சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கான எண்ணெய்யைக் களஞ்சியப்படுத்தும் வசதிகளை உருவாக்கிக்கொள்ள முயற்சிக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை