Friday 19th of April 2024 01:55:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 50 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பகல் 770 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் விபரம் வருமாறு,

யாழ். மாவட்டத்தில் 29 பேர்

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியாசலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 03 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

மன்னார் மாவட்டத்தில் 11 பேர்

மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 பேர்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன்

புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE