Friday 29th of March 2024 06:52:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
இன்று இதுவரை 1785 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

இன்று இதுவரை 1785 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!


இலங்கையில் மேலும் 475 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (ஜூலை-23) முன்னதாக 1310 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 475 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்று இதுவரை 1785 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 293,083 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் மேலும் 953 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 265,708 ஆக உயர்வடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனாத் தொற்று காரணமாக நேற்று 43 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 4002 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE