Thursday 25th of April 2024 12:27:39 PM GMT

LANGUAGE - TAMIL
-
கறுப்பு ஜூலைக் கொடூரங்களை ஒருபோதும்  மறவோம் - கனேடிய எம்.பி. ஹரி ஆனந்தசங்கரி!

கறுப்பு ஜூலைக் கொடூரங்களை ஒருபோதும் மறவோம் - கனேடிய எம்.பி. ஹரி ஆனந்தசங்கரி!


இலங்கையில் அரச ஆதரவுடன் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை கொடூரங்களை ஒருபோதும் மற்வோம் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை இனப்படுகொலை 38 ஆண்டுநினைவு நாளை ஒட்டி அவா் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசின் ஆதரவுடன் காடையர்கள் தமிழ் மக்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியும் உயிரோடு தீவைத்துக் கொழுத்தியும் தமிழர்களின் வீடுகளையும் வர்த்தக மையங்களை சூறையடியும் கொடூரங்களில் ஈடுபட்டனர்.

இந்தக் கொடூரங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், வன்முறைகளை அடுத்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் இடம்பெயர்ந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள எங்கள் சகோதார, சகோதரிகளுடன் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம்.

அநீதிகளுக்கு நீதி கோரவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்தவும் நாங்கள் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE