ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால், ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்திப்பை கடந்த 21 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் அந்த சந்திப்பு பிற்போடப்பட்ட நிலையில், இன்று முற்பகல் 11 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை