Wednesday 17th of April 2024 08:36:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா  தவறான திசையில் செல்வதாக எச்சரிக்கை!

கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா தவறான திசையில் செல்வதாக எச்சரிக்கை!


கொரோனா தொற்று நோய் விவகாரத்தில் அமெரிக்க தவாறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரும் தொற்றுநோய் நிபுணருமான அந்தோனி ஃபாசி எச்சரித்துள்ளார்.

நாட்டில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் அதிகளவில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினார்.

சி.என்.என். தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொற்று நோயின் தற்போதைய போக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு பரிந்துரைப்பது குறித்து அரசின் பொது சுகாதார அதிகாரிகள் தொடா்ந்து பரிசீலித்து வருகின்றனா் எனவும் அந்தோனி ஃபாசி கூறினார்.

கொரோனா வைரஸால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய குறைந்த நோய் எதிா்ப்பாற்றல் கொண்டவா்கள், புற்றுநோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்கள் உள்ளிட்டோா் ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளையும் போட்டிருந்தாலும் கூட கூடுதலாக மேலுமொரு தடுப்பூசியைபோட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படலாம். இதுதொடா்பாக சுகாதார நிபுணா்கள் ஆய்வு செய்து வருகின்றனா் என்றும் அவர் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 49 வீதம் போ் (16.30 கோடி போ்) இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE