யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 49 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்,போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆலய திருவிழா ஒன்றில் பங்குகொண்ட பெருமளவானவர்களுக்கு கரவெட்டியில் நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.
தொற்றாளர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விரிவான தகவல் விரைவில்.. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி