Tuesday 16th of April 2024 02:13:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறையில் வைத்தியர் உட்பட்ட 13 பேருக்கு கொரோனா!

பருத்தித்துறையில் வைத்தியர் உட்பட்ட 13 பேருக்கு கொரோனா!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியாலை ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வைத்தியர் உட்பட்ட 13 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் வைத்தியர் உட்பட்ட 09 பேர் வெளிநோயாளர் பிரிவு ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள்.

03 பேர் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், ஒருவர் விடுதி இலக்கம் 06 சிகிச்சைபெற்றுவந்த நோயாளி என்று தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆய்வுகூட ஊழியர் ஒருவருக்கு நேற்றுத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE