Saturday 20th of April 2024 05:13:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
கரவெட்டியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் ஆலயத் திருவிழாவில் பங்கேற்றவர்கள்!

கரவெட்டியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் ஆலயத் திருவிழாவில் பங்கேற்றவர்கள்!


கரவெட்டியில் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 49 பேரும் ஆலயம் ஒன்றில் திருவிழாவில் பங்கேற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.

திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் கரவெட்டி தெற்கில் நேற்றைய நாள் 179 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் 49 பேர் தொற்றாளர்களாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் குறித்து விசாரித்தபோது,

கரவெட்டி தெற்கு முங்கோடை முருகன்கோவில் திருவிழாவில் பங்குகொண்டவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த தொற்றாளர்ளை நாளை கொரோனா நிலையங்களுக்கு அனுப்ப ஏற்பாடு மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால் குறித்த பகுதி முடக்கப்படக்கூடும் என்கின்றனர் சுகாதாரத் தரப்பினர்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE