Tuesday 16th of April 2024 04:20:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாவட்டத்தில் 115 பேர் உட்பட வடக்கில் 132 பேருக்கு தொற்றுறுதி!

யாழ்.மாவட்டத்தில் 115 பேர் உட்பட வடக்கில் 132 பேருக்கு தொற்றுறுதி!


யாழ்.பரிசோதனைக்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 115 பேர் உட்பட 132 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவற்றின் விபரம் வருமாறு,

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று 795 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 81 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 81 பேர்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர்,

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 49 பேர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 13 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 08 பேர்,

வவுனியா பாவற்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களுடன் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 227 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 34 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,

யாழ்.மாவட்டத்தில் 34 பேர்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் குழந்தைகள் இருவர்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குளத்தில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE