Tuesday 16th of April 2024 06:18:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் எண்ணிக்கை 52,227 ஆக உயர்வு!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் எண்ணிக்கை 52,227 ஆக உயர்வு!


கொரோனாத் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ'ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 52,227 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 48,000 பேருக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE