இலங்கையில் ஒரு நாளில் மிக அதிகளவாக நேற்று மொத்தம் 4 இலட்சத்து 37 ஆயிரத்து 878 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 628 பேருக்கு சினோபார்ம் முதல் தடுப்பூசி போடப்பட்டது. 55,722 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றனர்.
அத்துடன், 108 பேருக்கு பைசர் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது. 25 ஆயிரத்து 420 பேர் மொடர்னா முதல் தடுப்பூசியை நேற்று பெற்றுக்கொண்டனர்.
இவற்றுடன் நாட்டில் இதுவரை மொத்தமாக 59 இலட்சத்து 45 ஆயிரத்து 237 பேர் சினோபார் முதல் தடுப்பூசியையும் 14 இலட்சத்து 82 ஆயிரத்து 305 பேர் இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
925,242 பேர் அஸ்ட்ராஜெனேகா -கொவிஷீல்ட் முதல் தடுப்பூசியும் 385,885 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றனர்.
அத்துடன், ஆயிரக்கணக்கில் ஸ்புட்னிக் வி, பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் நாட்டில் நிர்வகிக்கப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை