முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாலைப் பகுதியில் விறகு வெட்டச் சென்றவர் வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பகுதிக்கு விறகுவெட்டச் சென்றவர் மரம் ஒன்றின் அடிப்பகுதியை வெட்ட முற்பட்டபோது வெடி விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு