யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து வருடாந்தம் மடுத்திருத்தலத்தின் பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்கள், ஆடிமாதம் 02ம் திகதி நடைபெறும் உற்சவத்தில் கலந்து கொண்டு வந்தனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு ஆடி மாதத்தில் நடைபெற்ற உற்சவத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (27) அதிகாலை 3:00 மணிக்கு வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து ஒரு தொகுதி யாத்திரிகர்கள் மடுவிற்கு புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் A9 வீதி வழியாக முறிகண்டியில் இருந்து கொக்காவில் வீதி வழியாக ஐயன்கன் குளம் வரை சென்று இரவு தங்கியிருந்தனர்.
இன்று காலை இவர்கள் ஐயன்கன் குளத்தில் இருந்து மல்லாவி வழியாக நட்டாங்கண்டலைச் சென்றடைந்து, நாளை(29) புனித மடு திருத்தலத்தை சென்றடைய உள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபடவும், நாட்டு மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழவும் குறித்த பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு