இந்தியாவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 9 மணி வரையான கடந்த 24 மணி நேரங்களில் 43,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், 640 கொரோனா மரணங்களும் பதிவாகின.
புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 கோடியே 15 இலட்சத்து 28 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 04 இலட்சத்து 22 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 03 கோடியே 07 இலட்சத்து 1,612 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது நாடெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,03,840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று வரை மொத்தம் 45 கோடியே 07 இலட்சத்து 06 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா