Thursday 25th of April 2024 09:15:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு தொடரை வென்ற இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலர் சன்மானம்!

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு தொடரை வென்ற இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலர் சன்மானம்!


இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ரி-20 கிரிக்கெட் தொடரை வென்றமைக்காக இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இதில் 2 - 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரைக்கைப்பற்றியது.

அத்துடன்ஈ முன்னதாக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 - 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில் நிறைவு பெற்ற இந்திய அணியுடனான ரி-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து 100,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE