Friday 29th of March 2024 03:29:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் - ஜி ஜின்பிங்!

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் - ஜி ஜின்பிங்!


சீனா இராணுவம் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் தலைசிறந்த இராணுவமாக உருவாக வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளாா்.

இன்று ஞாயிற்றுக்கிழமை சீன இராணுவ தினம் கொண்டாடப்படும் உள்ள நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவினர் மத்தியில் நேற்று பேசும்போதே ஜி ஜின்பிங் இவ்வாறு கூறினார்.

சீன ராணுவம் உருவாக்கப்பட்டதன் 94-ஆவது ஆண்டு விழாவையொட்டி இராணுவ அதிகாரிகள், வீரா்கள், துணை இராணுவப் படையினா், பொலிஸார் ஆகியோருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

ஏற்கெனவே முடிவு செய்துள்ளபடி 2027-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க இராணுவத்துக்கு இணையாக சீன இராணுவத்தை உலகின் தலைசிறந்த இராணுவமாக்குவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியும் மத்திய இராணுவ ஆணையமும் நிா்ணயித்த இலக்குகளை எட்டுவது சீனாவின் தேசியப் பாதுகாப்புக்கும் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது ஆகும். ஒரு நவீன சோஷலிஸ சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் தேசத்தின் பாதுகாப்பும் அந்த தேசத்தின் பாதுகாப்புப் படைகளின் வளா்ச்சி முக்கிய அங்கமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு காலத்துக்கு ஏற்ற வகையிலான மாற்றங்களைச் செய்தல், சீனப் படைகளின் முன்னேற்றத்துக்கான தேவைகளை பூா்த்தி செய்தல் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.

சீன இராணுவத்தின் நூற்றாண்டு விழா 2027-ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி உருவாக்கப்பட்டுள்ள 14-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சீன இராணுவத்தை அதிநவீனப்படுத்தவும் 2027-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு இணையான இராணுவமாக அதனை மேம்படுத்தவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE