டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய ஒரு தடகள வீரர் உட்பட மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவற்றுடன் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்களிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்றுவரும் டோக்கியோ நகரில் தொற்று நோய் தெடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ நகரில் மட்டும் 3,058 புதிய கொவிட் -19 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், ஜப்பான் முழுவதும் நேற்று 12,000 தொற்று நோயாளர் உறுதிப்படுத்தப்பட்டனர். உறுதிப்படுத்தப்பட்ட பெரும்பாலான தொற்று நோயாளர்கள் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்