Thursday 25th of April 2024 03:40:17 PM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஒரு வாரத்தில் 7.5 சதவீதம் உயர்வு!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஒரு வாரத்தில் 7.5 சதவீதம் உயர்வு!


இந்தியாவில் கொரோனா 2வது அலை தொற்று பரவல் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருந்த நிலையில் அண்மைக்காலமாக அந்நிலை தணிந்திருந்த போதிலும் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை கடந்த மே மாத தொடக்கத்தில் உச்சம் அடைந்தது. அதன்பிறகு தொடர்ந்து 11 வாரங்களாக பாதிப்பு குறைந்து வந்தநிலையில், கடந்த வார பாதிப்பு 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் 2.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதற்கு முந்தைய வாரத்தில் 2.66 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் ஒரு வாரத்தில் பாதிப்பு 7.5 சதவீதம் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே இன்று காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 95 ஆயிரத்து 958 ஆக உயர்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE