Friday 29th of March 2024 12:14:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
அகதிகளை எல்லையில் இடைமறித்து திருப்பியனுப்பும்  அமெரிக்காவின் முடிவு நீடிக்கப்பட்டமைக்குக் கண்டனம்!

அகதிகளை எல்லையில் இடைமறித்து திருப்பியனுப்பும் அமெரிக்காவின் முடிவு நீடிக்கப்பட்டமைக்குக் கண்டனம்!


கொவிட் -19 தொற்று நோய் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லைகளில் இடைமறித்து வெளியேற்றும் உத்தரவை நீடிக்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் சமீபத்திய முடிவை அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் கண்டித்துள்ளனர்.

கோவிட் -19 முன்னெச்சரிக்கையின் கீழ் மெக்ஸிகோவுடன் தெற்கு எல்லையைக் கடக்கும் பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றும் உத்தரவை மேலும் நீடிப்பதாக பைடன் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தொடர்ந்து பேணும் பைனின் வாக்குறுதிகளை மீறும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் கண்டித்துள்ளனர்.

"இது தவறான நடவடிக்கை அத்துடன், வெட்கக்கேடானது" என யுனைடெட் வீ ட்ரீம் (United We Dream) அகதிகள் உரிமைகள் அமைப்பின் நிறுவனர் கிறிஸ்டினா ஜிமினெஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் எல்லைகள் ஊடாக அமெரிக்கா வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொகை அதிகரிததுள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்த பொது சுகாதாரக் கொள்ளைகளை பைடன் நிர்வாகம் கையிலெடுத்துள்ளது. இது சட்டவிரோதமானது எனவும் அவா் கூறினார்.

கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் அகதிகளை இடைமறித்துத் திருப்பியனுப்பும் நடவடிக்கை மனிதாபினமாமற்றது. அத்துடன், அறிவியல் ரீதியாக ஆதாரமற்றது எனவும் அகதிகள் உரிமைகள் அமைப்பின் நிறுவனர் கிறிஸ்டினா ஜிமினெஸ் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE