கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் சிறுவர்கள் பெரும்பாலும் 6 நாட்களுக்குள் குணமடைந்து விடுகின்றனர். மிக அரிதாகவே நோயின் நீண்ட நாள் அறிகுறிகளை சிறுவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது என ஆய்வொன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் மிகக் குறைந்த அளவினரே கொரோனாவால் சற்று அதிக நோயறிகுறிகளை வெளிப்படுத்துவதுடன், பாதிக்கப்படுகின்றனர் என இந்த ஆய்வில் பங்கேற்ற லண்டன் கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவா்களிடையே தலைவலி மற்றும் சோர்வு போன்ற மிகவும் பொதுவான அறிகுறிகள் தென்படுவதை கண்டறிந்துள்ளதாக ரோயல் கல்லூரி மருத்துவமனை சிறுவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் பெரும்பாலான சிறுவர்களுக்கு அறிகுறிகளே தென்படுவதில்லை எனவும் அவா்கள் கூறுகின்றனர்.
கொவிட் 19 தொற்று நோய் சிறுவர்களை எவ்வாறு பாதிக்கிறது? என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குறித்த அறிக்கையை லான்செட் சைல்ட் அண்ட் அட்லோசென்ட் மருத்துவ இதழ் (the Lancet Child and Adolescent Health journal)வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 2020 முதல் பெப்ரவரி 2021 -க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தொற்றுக்குள்ளான ஐந்து முதல் 17 வயதுக்குட்பட்ட 1,734 சிறுவர்களிடையே அவதானிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தலைவலி, சோர்வு, தொண்டை புண் மற்றும் வாசனை இழப்பு ஆகியவை தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே மிகவும் பொதுவான அறிகுறிகளாகக் காணப்பட்டன.
முன்பள்ளி செல்லும் வயதையுடைய சிறுவர்கள் nபரும்பாலும் தொற்று நோயிலிருந்து 5 நாட்களிலேயே குணமடைந்தனர். 12 முதல் 17 வயது வரையான சிறுவர்கள் குணமடைய ஒரு வாரம் வரை ஆனது ஆய்வில் அவதானிக்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் சிறுவர்கள் தொடர்பான கவலைகளில் இருந்து பெற்றோர் விடுபட ஆதரவளிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து